டட்லி சிறிசேனாவின் அரிசி ஆலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை
பொலன்னறுவை (Polonnaruwa) அடுமல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் டட்லி சிறிசேனவிற்கு (Dudley Sirisena) சொந்தமான சுடு அரலிய அரிசி ஆலையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நேற்று (27) இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை
முன்னணி அரிசி ஆலை
நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இந்த சோதனையின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்லி சிறிசேன, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையின் முன்னணி அரிசி ஆலையின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam