ராகம துப்பாக்கிச் சூட்டுச் சூடு: சந்தேகநபர் அதிரடி கைது
ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் ஒருவர் பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பை - இஸ்சம்மடில்ல பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் நேற்று முன்தினம்(18.03.2026) கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்
பாரிய ஆயுதங்கள் மீட்பு
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் வாக்குமூலத்திற்கு அமைய, அவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 14 தோட்டாக்களும் நேற்று(19.03.2026) பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இந்தத் துப்பாக்கி இதற்கு முன்னர் ஏதேனும் பாரிய குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தற்போது தடயவியல் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள தனிப்பட்ட குரோதங்கள் அல்லது பாதாள உலகக் குழுக்களின் தொடர்பு குறித்தும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.