கே.பியை கைது செய்யும் போது அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்யமுடியவில்லை..! நாமல் கருணாரத்ன கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று (23.09.2022) இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், அர்ஜுன் மகேந்திரன் என்பவர், சாதாரண அரச அதிகாரி. அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், விடுதலைப் புலிகள் அமைப்பில் பலம்பொருந்திய தலைவராக இருந்தார்.
அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியவில்லை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தப்படியாக அவரே தலைவர். இப்படிபட்ட கே.பி. உலக நாடுகளை சுற்றி வலம் வருகையில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். கே.பியை இவ்வாறு அழைத்துவர முடியுமென்றால், அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியாமல் உள்ளது?
மகேந்திரன், ரணிலின் நண்பர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல கே.பியின் கட்டளையை ஏற்று செயற்பட்ட இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். கே.பியோ வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்.
மர்மமாக உள்ள விடயம்
கே.பியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கப்பல்கள், பணம், தங்கத்துக்கு என்ன நடந்தது, மர்மமாகவே உள்ளது. எமது ஆட்சியில் இவை குறித்து விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கையில், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இவ்வாறு குறைந்த விலையில் நெல்லை வாங்கிவிட்டு, அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகின்றது என கூறியுள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
