பருத்தித்துறை நகரசபை விடயங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி
பருத்தித்துறை நகரசபை நிர்வாக விடயங்களில் தலையீடு செய்யும் ரஜீவன் எம்.பி வடமராட்சி கிழக்கு போக்குவரத்தில் அக்கறை காட்டாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை காரணமாக பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அரச மற்றும் தனியார் பேருந்துகள்
அண்மையில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் மருதங்கேணிவரை நடந்து சென்றுள்ளனர்.
பருத்தித்துறை கேவில் வரை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் எந்தவித பொறுப்புணர்வுமின்றி தாம் நினைத்த நேரத்திற்கு புறப்படுவதும், சென்றடைவதாலும் மாணவர்கள் ஊழியர்கள், பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

குறிப்பாக கட்டைக்காட்டிலிருந்து பருத்தித்துறை வரை பாடசாலை சேவை க்காக ஈடுபடும் அரச பேருந்துகள் வடமராட்சியின் பிரபல பாடசாலைகளை சென்றடைய காலை 7:50 நிமிடம் ஆகுகின்றது.
இதனால் நாளாந்தம் அரைமணி நேரம் மாணவர்கள் தினமும் நேரம் தாமதித்து செல்வதுடன் மந்திகை மருத்துவமனை உட்பட பல அரச ஊழியர்கள் தமது கடமைக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் தினமும் பாதிப்படைகின்றனர்.
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து கேவில் வரை நீண்ட நேர இடைவெளிக்கொரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன. குறிப்பாக பருத்தித்துறை கேவில் பேருந்து சேவை பிற்பகல் 2:15 க்கு பின்னர் 6:20 மணிக்கே பருத்தித்துறையிலிருந்து கேவிலுக்கான சேவையில் ஈடுபடுகின்றது.
இதனால் பல மாணவர்கள் பலமணி நேரமாக வீதிகளில் காத்திருக்கின்றனர். பருத்தித்துறை வவுனியா பேருந்து சேவை, இரவு 8:30மணிக்கு இடம்பெறும் பருத்தித்துறை மருதங்கேணி ஊடன கொழும்பு பேருந்து சேவை என்பனவும் 5 வருடங்களாக நிறுத்தபட்டுள்ளது.
நகரசபையின் தீர்மானங்களை நிறுத்துமாறு
பருத்தித்துறை கேவில் பேருந்து சேவை கேவிலுக்கு செல்லாது கட்டைக்காடு கிராமத்துடன் நிறுத்தப்படுவதனால் 5 km தூரம் வரை கேவிலுக்கு மாணவர்கள் உட்பட பயணிகள் இரவிரவாக நடந்து செல்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பெரிய பேருந்து களை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவரால் இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமை யாளருக்கு அறிவுறுத்தப்பட்டும் சிறிய பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன.

இதேவேளை தனியார் பேருந்து சேவைகள் எந்தவித பொறுப்புணர்வுமின்றி தாம் நினைத்த நேரம் சேவையில் ஈடுபடுவதும், நினைத்த நேரம் சேவையை நிறுத்துவதும் வழமையாகவுள்ளது. தனியார் பேருந்து சேவை வழங்குனர்கள் தமக்கு உரிய வருமானம் இன்மையை காரணம் காட்டி சேவையை இடைநடுவில் நிறுத்துகின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்தும் தனியார் பூக்கும் வரத்து அதிகார சபையிடம் முறைப்பாடு செய்தும் அவர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். நாகர் கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை குறித்த சேவை வழங்குனரால் பல வருடங்களாக நிறுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் ஒருங்கிணைப்பு தலைவராக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் பருத்தித்துறை நகரசபையின் தீர்மானங்களை நிறுத்துமாறு கடிதம் அனுப்பும் நிலையில், அவரது அரசாங்கத்தின் கீழேயுள்ள இலங்கை போக்கவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து அதிகார சபைகளுக்கு நடவடிக்கை எடுக்க அவரால் முடிவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை 750 வழித்தட பேருந்து சேவை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam