ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றுகை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றுகை நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
குறிப்பாக 30 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஏன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது என கேள்வி எழுப்பபட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ நாணயக்கார இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
எந்த விஞ்ஞானபூர்வ அடிப்படையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 30 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு கூடுதல் பங்களிப்பு வழங்கும் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திற்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் கோவிட் தொற்று பரவுகை அதிகளவில் காணப்படுகின்றதா? தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் பாரதூரமான பிரச்சினை எழுந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றுகை குறித்த முன்னுரிமை பொறிமுறைமை உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் பைசர் தடுப்பூசியை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு வழங்கியமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஞ்ஞானபூர்வ அடிப்படைகளை புறந்தள்ளி அரசியல் ரீதியில் தடுப்பூசி ஏற்றுகை மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
