ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
ஐக்கிய இராச்சியத்திற்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவதானிக்கப்படுகிறது.

சொந்த செலவில் பிரித்தானியா சென்ற ஜனாதிபதியின் மனைவி
இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் ஆகியோர் மட்டுமே உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வைத்தியரும் இந்த குழுவில் இணைந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இதில் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க தனது சொந்த செலவில் இணைந்து கொண்டார்.
இதனிடையே, ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (19) நடைபெற்ற புலம்பெயர் இலங்கையர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும் இணைந்துகொண்டதாக மேலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan