பிரமிட் எனும் பாரிய நிதி மோசடி - தமிழ் ஆசிரியர் பரிதாபமாக உயிர் மாய்ப்பு
ஹம்பாந்தோட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கரஸ்முல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையின் விளையாட்டு அறையில் தூக்கிட்டு இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணத்தை இழந்த ஆசிரியர்
இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த ஆசிரியரே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளார்.
இவர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு- கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி முதல் இந்த ஆசிரியர் காணாமல் போயிருந்த நிலையில், அவரைத் தேடியபோது, விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை அதிபர் கண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அதிபர் கரஸ்முல்லை பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் பொலிஸார் சென்று சடலத்தை அகற்றியுள்ளனர்.
இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன்னர் உயிரை மாய்க்கப் போவதாக சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோத பிரமிட் திட்டம்
கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் பலன் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாக தெரிய வருகிறது.
அவர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலீடு செய்திருப்பது அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தெரியாது. இது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பலர் இந்த சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணத்தை முதலீடு செய்த பலர் பணத்தை இழந்துள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் ஆலோசனையின் பேரில் கரஸ்முல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
