புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து
புத்தளம் (Puttalam) - அனுராதபுரம் (Anuradhapura) பிரதான வீதியில் உள்ள நீர் வழங்கல் அதிகாரசபை அலுவலகத்திற்கு
முன்பாக சொகுசு காருடன் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, நேற்று (11.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
அனுராதாபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்றுடன் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, கார் தலைகீழாக புரண்டு முற்றாக சேதமாகியுள்ளது.
அதேவேளை, காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், கெப் ரக வண்டியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
