புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து
புத்தளம் (Puttalam) - அனுராதபுரம் (Anuradhapura) பிரதான வீதியில் உள்ள நீர் வழங்கல் அதிகாரசபை அலுவலகத்திற்கு
முன்பாக சொகுசு காருடன் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, நேற்று (11.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
அனுராதாபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்றுடன் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, கார் தலைகீழாக புரண்டு முற்றாக சேதமாகியுள்ளது.
அதேவேளை, காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், கெப் ரக வண்டியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
