தமிழர் பகுதியில் மீன் - இறாலுக்கும் வெளிநாடுகளிடம் கையேந்தும் ஆபத்து
எதிர்காலத்தில் மீனுக்கும் இறாலுக்கும் வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளியில் இன்றையதினம் (05.03.2024) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் மற்றும் சட்டவிரோத இழுவை மடி படகுகளின் மூலமான கடற்றொழிலை எதிர்த்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.
பெறுமதி மிக்க புங்குடுதீவின் கடல் வளங்கள் சில ஆயிரங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் மற்றும் சில அமைப்புக்களினால் விற்கப்படுகின்றன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அதேவேளை, இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri