ஜூலை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும்:தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
பேருந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி திலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் பேருந்து கட்டணங்களில் ஜூலை மாதம் முதலாம் திகதி திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது கட்டாயம்.
இதனால், எரிபொருள் விலை, உதிரிபாங்களில் விலைகள் அதிகரித்துள்ளமை, டொலரின் பெறுமதி அதிகரிப்பு போன்ற பல காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்து அமைச்சருக்கும் பேருந்து சங்கங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் நாளைய மறுதினம் (28) இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் மிரெண்டா தெரிவித்துள்ளார்.