பாதுகாப்பு செயலாளரால் தேவைக்கு ஏற்ப கட்டளையிட முடியும்!: நீதிவான் நீதிமன்றங்களுக்கு பிணை அதிகாரம் இல்லை (Video)
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கசிங்கவினால் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
1995ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்தின் கீழ் ஜனாதிபதி இவ்வாறு பிரகடனம் செய்துள்ளார்.
2022 செப்டம்பர் 23ஆம் திகதியிடப்பட்ட 2298/53 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே, தேவையானபோது கட்டளைகளை பிறப்பிக்கவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் படைத்த உரிய அதிகாரியாக பெயரிடப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறது எமது பத்திரிக்கை கண்ணோட்டம் நிகழ்ச்சி,