மட்டக்களப்பில் குளத்தை துப்புரவு செய்யும் பணி முன்னெடுப்பு (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையிலுள்ள கதிரவெளி தாமரை வில்லுக்குளத்திலிருந்து பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் உக்காத திண்மக் கழிவுகளை அகற்றும் சிரமதான பணியில் பிரதேச பொதுமக்கள் ஈடுபட்டிருந்துள்ளனர்.
உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் முகமாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் நீர் நிலைகள் அமைந்துள்ள பிரதேசங்களில் தூய்மையாக்கல் விழிப்புணர்வு தொடர் நிகழ்வொன்று நேற்றையதினம் (07.06.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சூழல் பாதுகாப்பு வேலை திட்டம்
இதன்போது வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கதிரவெளி தாமரை வில்லுக்குளத்தில் பிளாஸ்டிக் உட்பட பொலித்தீன்கள், இன்னும் பிற உக்காத பொருட்களையும் திண்மக் கழிவுகளையும் அகற்றுவதில் பிரதேச பொது மக்கள் ஆர்வமாக ஈடுபட்டிருந்தனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் பிரதேச செயலக சுற்றாடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.பானுபிரியா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சத்தியகாந்தினி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான ஏ.சஞ்சித்குமார், எஸ்.நவீன் உட்பட பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
