முல்லைத்தீவில் இரு பாடசாலை மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு
முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு
மாணவிகளுக்கு தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் துவிச்சக்கரவண்டிகள்
வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மிக நீண்ட தூரத்திலிருந்து பாடசாலைக்கு நடந்து சென்று வருவதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் துவிச்சக்கர வண்டிகளை குறித்த மாணவிகளுக்கு வழங்கி வைக்குமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துவிச்சக்கர வண்டிகள்
இந்நிலையில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று முன்தினம் (21.05.2024) துவிச்சக்கர வண்டிகள் மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள், கிளிநொச்சி சின்மியா மிஷன் சுவாமிகள் தமது தொண்டர்களுடன் சென்று வழங்கி வைத்துள்ளார்.