ஜூன் மாதத்திற்குள் மாகாணசபை தேர்தல் நடைபெறலாம்
2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக்கருத்தில் கொண்டு, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மாகாணசபைகளின் முன்னாள் உறுப்பினர்களை அவர் எதிர்வரும் புதன்கிழமை சந்திக்கவிருக்கிறார் என தெரியவருகிறது.
இந்தநிலையில் தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் ஏன் தூண்டப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் வாக்கெடுப்புகளை நடத்துவதற்கான மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடியபோது மாகாணசபை தேர்தல்களை பழைய சட்டத்தின் கீழ் அல்லது ஒரு புதிய அமைப்பில் சட்டத்தை திருத்திய பின்னரே நடத்த முடியும் என்று தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.