மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசு அஞ்சுகின்றது : சஜித் தரப்பு

National Peoples Party Tissa Attanayake Election Sri Lanka election updates
By Rakesh Sep 16, 2025 05:32 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தலைக் கண்டு அரசு எதற்காக அஞ்சுகின்றது? இந்தத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசுக்கு நாம் அழுத்தம் பிரயோகிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த அரசு ஊடகப் பிரசாரங்கள் மூலம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கின்றது. தேசிய மக்கள் கட்சி ஆட்சியேற்று ஓராண்டு நிறைவடைகின்றது. தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் அரசு எதனை நடைமுறைப்படுத்தியுள்ளது? வாக்குறுதிகளை ஒருபுறம் வைத்து விட்டு ஊடகப் பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே அரசு அவதானம் செலுத்தி வருகின்றது.

அவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் பழிவாங்கல்களுக்கும் உட்படுத்துகின்றது. அரசு மாத்திரமின்றி நாடாளுமன்றத்திலும் சபாநாயகரது நடத்தைகளிலும் பிரச்சினையுள்ளது. நாடாளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் சகல கட்சிகளுக்கும் பொதுவானவர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசு அஞ்சுகின்றது : சஜித் தரப்பு | Provincial Council Election Sri Lanka

அவரால் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போதைய சபாநாயகரின் நடத்தையை அவதானிக்கும் போது நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பதே சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட வழங்கப்படாது எனக் கூறியவர்கள் இன்று முதலீடு என்ற போர்வையில் பல இடங்களை தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் அபிவிருத்திக்கு முதலீடுகள் அவசியமாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

அதேவேளை, பொது இடங்களை அந்நியர்களுக்கு வழங்கும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றோம். ஜனாதிபதித் தேர்தலின் போது மின் கட்டணம் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மிக அழகான கதைகளை மக்களிடம் கூறினார்.

மின் கட்டணங்களை மூன்றில் இடங்கு மடங்கால் குறைக்க முடியும் எனக் கூறினார். தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால், இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் கூறியபடி குறைக்கப்படவில்லை.

அத்தோடு அண்மையில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஊழல், மோசடிகளை ஒழித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாகக் கூறிய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசு அஞ்சுகின்றது : சஜித் தரப்பு | Provincial Council Election Sri Lanka

இதற்காக அரசு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தேசிய மக்கள் சக்தியைப் போன்று இதற்கு முன்னர் எந்தவொரு அரசும் மக்களை ஏமாற்றவில்லை. அதேபோன்றுதான் மாகாண சபைத் தேர்தல் விடயத்திலும் அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

மேலும் தாமதப்படுத்தாது வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த அரசுகளைப் போன்று இந்த அரசும் மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சித்தால் அது தவறாகும். மாகாண சபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியவையாகும்.

எனவே, ஆளுநர்களால் அவற்றைத் தொடர்ந்தும் ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது. அவசர நிலைமைகளில் அவ்வாறு செய்ய முடியும். ஆனால், வருடக்கணக்கில் ஆளுநர் ஆட்சிக்கு இடமளிப்பது தவறாகும். எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம்.

மாகாண சபைத் தேர்தலைக் கண்டு அரசு எதற்காக அஞ்சுகின்றது? இந்தத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குள்ள உண்மையான மக்கள் ஆணை வெளிப்படும். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசுக்கு நாம் அழுத்தம் பிரயோகிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US