சித்திரை மாதத்தில் மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம்: சாணக்கியன் எடுத்துரைப்பு
சித்திரை மாதத்தில் மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம் ஒன்றை கொண்டுவந்த பின்னர் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி தங்களிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பில் இன்று கருத்து தெரிவித்த அவர்,
இன்று மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முதலாவது கூட்டத்தை தேர்தலில் பிற்பாடு இன்று நடத்தியிருந்தோம்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
எதிர்வரும் 25 ஆம் திகதி மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின், நினைவு தினம்.
இது தொடர்பாக வாலிபர் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், சில நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.
அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதம் பொங்கல் விழாவை வவுணதீவுபிரதேசத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

கட்சியினுடைய செயற்பாடுகள் உள்ளூராட்சி மன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் போன்றவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் நாங்கள் பேசி இருந்தோம்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam