மலையகத்தில் உதவி பொருட்களை பாரபட்சமின்றி சகலருக்கும் வழங்க நடவடிக்கை: செந்தில் தொண்டமான்
உதவி பொருட்களைப் பாரபட்சமின்றி மலையகத்தில் உள்ள சகலருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமாகிய செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிவாரண பொருட்களை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் தான் கொடுப்போம் என கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமில்லை.
மக்களுக்கு வழங்கப்படும்
உதவி பொருட்களைப் பாரபட்சமின்றி மலையகத்தில் உள்ள சகலருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.