இலங்கைக்கு பெருமை! மகிழ்ச்சி வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர்
கோவிட் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்குவதாக இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிராந்திய நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இது எமது நாட்டுக்கு பெருமையாகும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இற்தகிடையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும், அதற்கும் மேலதிகமாக மேலும் பல இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,