தையிட்டியில் அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தையிட்டி போராட்டத்தின் போது வேலன்சுவாமிகளுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மக்களுடைய காணிகளை மக்களுக்கே கொடுக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் ஒன்றிணைந்து பெருமளவான போராட்டங்களை செய்வதன் மூலமே காணிகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
தேர்தல் பிரசாரங்ககளின் பின்னர் வீதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இராணுவ வைத்தியசாலையொன்றும் கட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் வழக்கு தொடுத்து குறித்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri