கொழும்பில் எரிசக்தி அமைச்சின் செயலாளரை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் அவரது காருக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் குழு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு வளாகத்தில் இன்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இரகசியங்களை வெளியிட முடியாது...

தேக்கு கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாரிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அமைச்சரவை இரகசியங்களை வெளியிட முடியாது என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சின் செயலாளரை வெளியேற விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனத்தை சுற்றி வளைத்தமை குறிப்பிடத்தக்கது.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan