நாளை கொழும்பில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு தடை
சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று(27) பிற்பகல் 2.30 முதல் நாளை(28) மாலை 6 மணி வரை குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள்
இதனால் வீதிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படுவதாக கூறி நீதிமன்றம் தடை உத்தரவை அறிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சின் நுழைவாயிலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பிரதான வீதி, டீன்ஸ் வீதி, செரம் வீதி, ரிஜண்ட் வீதி மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கத்தைச் சுற்றியுள்ள நடைபாதைகளை மறித்து போராட்டம் மற்றும் பேரணிகளை நடத்த முடியாது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
