கொழும்பு - புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் முன்பாக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Photos)
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு - புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் திரண்டுள்ளனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் கொழும்பு - புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வசந்த முதலிகே முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.