திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் சம்பந்தனால் தடுக்கப்பட்டுள்ளது! குகதாஸன் தகவல்(Photo)
திருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்கிற்கு அருகில் 4 அரச மரம் நிற்கும் காணியில் நடைபெறவிருந்த தாய்லாந்து பிக்குமாரின் பிரித் ஓதும் நிகழ்வும் பாதயாத்திரை செல்லும் வழித்தடமும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஸன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை அலுவலகத்தில் நேற்று (13.05.2023) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,“தமிழரசு கட்சி குழுவினருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பின் போது அரசாங்க அதிபர் இந்த உறுதி மொழிகளை வழங்கினார்.
மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாகவே இம்மாற்றம் இடம்பெற்றது.”என தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில், மாவட்ட கிளையின் செயலாளர் கே.செல்வராஜா. கிளையின் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam