திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் சம்பந்தனால் தடுக்கப்பட்டுள்ளது! குகதாஸன் தகவல்(Photo)
திருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்கிற்கு அருகில் 4 அரச மரம் நிற்கும் காணியில் நடைபெறவிருந்த தாய்லாந்து பிக்குமாரின் பிரித் ஓதும் நிகழ்வும் பாதயாத்திரை செல்லும் வழித்தடமும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஸன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை அலுவலகத்தில் நேற்று (13.05.2023) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,“தமிழரசு கட்சி குழுவினருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பின் போது அரசாங்க அதிபர் இந்த உறுதி மொழிகளை வழங்கினார்.
மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாகவே இம்மாற்றம் இடம்பெற்றது.”என தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில், மாவட்ட கிளையின் செயலாளர் கே.செல்வராஜா. கிளையின் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
