கொழும்பிற்குள் நுழையப்போகும் பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள் (Video)
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சற்று முன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
05 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த - பாலி பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும், 1995/37 சட்டத்தை மாற்றி பௌத்த - பாலி பல்கலைக்கழகத்தை பட்டத்தினை விற்கும் வியாபார நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பை நோக்கி வர திட்டமிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.