நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (Video)
நிரந்தர நியமனம் வழங்கக் கோரி டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (26.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிவதற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
நிரந்த நியமனம் வழங்க வேண்டும்
எனவே, எமக்கு நிரந்த நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தே இன்றைய தினம் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஆனால் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கு நல்ல முடிவைத் தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.






போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
