அரசியல் தீர்வு கோரி தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!
மட்டக்களப்பு- வெல்லாவெளி பிரதேசத்தில் மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 53 ம் நாள் போராட்டம் (22.09.2022) இடம்பெற்றது.
இப் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து 'எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்",“எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “நடமாடுவது எங்கள் உரிமை”, “பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை”,“ஒன்று கூடுவது எங்கள் உரிமை” என கோஷங்களை எழுப்பியவாறு தங்களின் உரிமை கோரிக்கையையும் முன்வைத்தனர்.
முதலாம் இணைப்பு
"கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 51 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
100 நாட்கள் செயல்முனைவு
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் தொனிப்பொருளில் 100 நாட்கள் செயல்முனைவு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், 51 ஆவது நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி கிராமத்தில் நேற்று (20.09.2022) இடம்பெற்றுள்ளது.
உரிமைகளுக்கான கோஷம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
நிரந்தரமான அரசியல் உரிமை
வேண்டும், எங்கள் நிலம் எங்கள் வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோஷங்களை
எழுப்பியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.