அனலைதீவு துறைமுகத்தில் அட்டை பண்ணைக்கு எதிராக போராட்டம்!(Video)
அனலைதீவு துறைமுகத்தில் அட்டைப் பண்ணைக்கு எதிராக இன்றையதினம் (02.12.2022) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனலைதீவு கடற்றொழிலாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் கருத்து
இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், அட்டைப் பண்ணையால் கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது.
பலதடவைகள் பல தரப்பினருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியும் உரியவர்கள் கடற்றொழிலாளர்களது நிலையை கருத்தில் கொண்டு தீர்வு வழங்கவில்லை.
கடற்றொழிலாளர்களது நிலையை கருத்தில் கொண்டு தீர்வு வழங்குமாறு கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என கூறியுள்ளனர்.