நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos)

Protest Batticaloa People Economic Crisis
By Kumar Apr 10, 2022 06:10 PM GMT
Report

மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்துவிட்டது என மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டினை பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் ஏனைய அழிவுகளிலிருந்து பாதுகாத்தருளும் பல்லின, பல் சமய மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழும் நிலையினை ஏற்படுத்தவேண்டி பிரார்த்தனையுடன் கூடிய அமைதிப்போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கத்தோலிக்க,மெதடிஸ், முஸ்லிம், இந்து மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

“முறையான பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்து”,“சுரண்டலை இலஞ்சத்தினை ஒழி”,“ஊழலை வீண்விரயத்தினை ஒழி”,“மனித இன சகவாழ்வினை பேணு”,“மனித உரிமையினை மதி”,“மனித மான்பினை மதி” உட்பட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை தாங்கியவாறு பிரார்த்தனை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,

“இந்த நாடு ஒரு இக்கட்டான நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.ஒரு அமைதியில்லை, சமாதானமில்லை, மக்கள் மத்தியில் மகழ்ச்சியில்லை, எல்லோர் வாழ்விலும் சோகம் நிறைந்திருக்கின்றது.

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

இதற்கு அடிப்படை காரணம் எம்மை ஆண்டவர்கள், எம்மை ஆண்டுகொண்டிருப்பவர்கள், இனி ஆளப்போகின்றவர்கள் மக்கள் நலனில் அக்கறைகொள்ளவில்லை. அதன் காரணமாகவே இவ்வளவு வேதனைகளையும் இலங்கை மக்கள் அனுபவித்துவருகின்றனர்.

இன மத வேறுபாடுகளின்றி அனைவரும் அனுபவித்துவருகின்றனர். அதனால் நாங்கள் இந்த நிலைக்கு கடவுள்தான் வழியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த பிரார்த்தனையினை முன்னெடுத்திருக்கின்றோம்.

மனித உரிமை,மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்துவிட்டது.அதனை நாங்கள் தேட வேண்டும்.மனிதன் மனிதனை மதிக்காமல் வாழும் நிலையே காணப்படுகின்றது.

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

இல்லையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பசியினால் பட்டியினால் துன்பத்தினால் வாழும் நிலையேற்பட்டிருக்காது. மனித உரிமை மீறல்கள் மறைய வேண்டும். இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையே காணப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு எத்தனையோ மக்களை காணாமல் ஆக்கிவிட்டார்கள், எவ்வளவோ பேர் மறைந்துவிட்டார்கள்,எங்களுக்கு பேசும் உரிமையில்லை. யாராவது புகைப்படத்தினை வைத்திருந்தாலும் கைதுசெய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான நிலை மாற வேண்டும்.

இதற்காக நாங்கள் போராட வேண்டும். இன மத மொழி வேறுபாடுகள் இல்லாமல் போராட வேண்டும்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.   

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

கல்முனை

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இப் போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் காலை இடம்பெற்றதுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன் போது போராட்டகாரர்கள் “நிர்வாகத்தை சரியாக செய்யுங்கள்”,“மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்” ,“வினை விதைத்தவன் வினையறுப்பான்”,“குடும்ப ஆட்சி வேண்டாம் மக்கள் ஆட்சியே வேண்டும்”,“காலால் உதைக்காதீர்கள் கைகொடுக்கும் தெய்வமாக மாறுங்கள்”,“மக்கள் சேவை மகேசன் சேவை என அறிந்து கொள்ளுங்கள்” என அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US