சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்(Photos)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 'விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்' எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் காந்திபூங்காவிற்கு முன்னால் நேற்று (10.12.2022) இடம்பெற்றுள்ளது.
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை குறைக்க வேண்டாம்
இந்த கவனயீர்பு போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு 2023ம் ஆண்டு முன்மொழியப்பட்ட தேசிய பாதீட்டில் விசேட தேவையுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாகொடுப்பனவை குறைப்தாக எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்று காரணமாக விசேட தேவையுள்ள பெண்கள் வருமானத்தை இழந்துள்ளனர். எனவே 2023 ம் பாதீட்டில் பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்மொழிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விசேட தேவையுடைய பெண்கள் பிள்ளைகள் மற்றம் அவர்களில் தங்கிவாழும் முதியவர்கள் நாளாந்த உணவு தட்டுபாடு எதிர்கொள்வதுடன் போசாக்கு மற்றும் சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
எனவே விசேட தேவையுடைய பெண்களது குடும்பங்களுக்கான புதிய தொரு மேம்பாட்டு உணவு பாதுகாப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு தெருநாடகம் மூலம் கவனயீர்பு
மேலும் விசேட தேவையுள்ள பெண்கள் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள, தமக்கான இழப்பீட்டை பெற்றுக் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கி, மாதாந்த கொடுப்பனவை குறைக்க வேண்டாம் போன்ற 5 கோரிக்கைகள் இழப்பீட்டிற்கான ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
விசேட தேவையுள்ள பெண்களுக்கு சர்வதேச ரீதியான இழப்பீடு கைசாத்திட்டபடி இலங்கையில் ஜ.சி.ஆர்.பி.டி யை நடைமுறைப்படுத்துங்கள்.
சமூக நலன் திட்டம் தேவை, உணவு பாதுகாப்பு திட்டம் தேவை, பொதுச்சேவை வழங்கும் போது பாரபட்சம் காட்டாதே, மாற்றுத்திறனாளிகளின் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் கைவைக்காதே போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது காலை 9.30 மணிமுதல் 11 மணிவரை தமது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் விழிப்புணர்வு தெரு நாடகம் ஒன்றை நடாத்திய பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
