யாழில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றையதினம் (23.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர் போராட்டமாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டம்
அதற்கமைய, இன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |