புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும்,இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவருமான சி.ஜெயகாந்த் என்பவரின் அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ விடுதி கடந்த 30 ஆம் திகதி முறையான தேடுதல் அனுமதியின்றி சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த தேடுதலின் போது அலுவலக தேவைக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் அனுமதியின்றி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹேரத் என்பவரால் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கோரி வடமாகாண இலங்கை நிர்வாக சேவை சங்க உத்தியோகத்தர்கள் மாகாணம் தழுவிய சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு 08.08.2022 அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன்,மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்க வடமாகாண கிளை அறிவித்துள்ளது.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri