புதிதாக நிர்மானிக்கப்படும் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்(Photos)
நுவரெலியா மாவட்டம்- டயகம நகரில் புதிதாக திறக்கப்படும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்த பகுதி மக்களால் இன்றையதினம் (02.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு கொடிகளை கட்டி, கைகளில் பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததோடு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
தேவையற்ற செயற்பாடு
டயகம நகரில் மூன்று மதுபானசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நான்காவதாக ஒரு மதுபானசாலை ஆரம்பிக்கப்படுவது தேவையற்றதாக இருக்கும் நிலையில் பிரதேச மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கும் செயற்திட்டமொன்று எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் மதுபானசாலைக்கு அருகில் 200க்கும் அதிகமானோர் வசித்து வரும் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களும் அருகில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதேவேளை குறித்த மதுபானசாலை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்தும் படி பொதுமக்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இப்போராட்டத்தில் மத குரு தலைவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள், வர்த்தகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




