நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டம்
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பெறுமதி சேர் வரி 18 வீதமாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

வரி நெருக்கடி
நாடு தழுவிய ரீதியில் மக்களை அணி திரட்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் போராட்டம்
இந்த போராட்டத்தின் முதல் கட்டமாக எதிர்வரும் 30 ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பொது மக்கள், சிவில் அமைப்புக்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri