கிளிநொச்சியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கிளிநொச்சியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லிப்பளை மக்களால் எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுவது தொடர்பிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டுள்ளது.
பளை பேருந்து நிலையம்
இதனால் அல்லிப்பளை பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பளை பேருந்து நிலையத்திலிருந்து கவனயீர்ப்பாக சென்ற மக்கள் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கவனம் செலுத்த வேண்டும் என மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri