மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை திட்டம் தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
மன்னாரில் 50 மெகாவோட்ஸ் காற்றாலை மின்சார திட்டத்திற்கான சர்வதேச அளவிலான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
காற்றாலை திட்டம்
மன்னாரில் 50 மெகாவோட் காற்றாலை வசதியை உருவாக்க, நிதி மற்றும் தொழில்நுட்ப திறன் கொண்ட பொருத்தமான தரப்பினரை இந்த சர்வதேச கேள்விப்பத்திரத்தின் மூலம் அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் விண்ணப்பதாரிகள் தமது முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கான காலக்கெடு 2024 மே 9 ஆம் திகதியாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |