இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கட்டாயம்: மக்கள் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடுமென பேராசிரியர் எச்சரிக்கை
சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்களுக்கு நெருக்கடி
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்படுமிடத்து மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
பொருளாதார நெருக்கடி இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. தரவுகள் ஒழுங்குமுறையில் இல்லாமையினால் சொத்து வரியை விதிப்பது இலகுவானது இல்லை.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கட்டாய நிலை
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியமான நிபந்தனைகளில் சொத்து வரி உள்ளடங்கியுள்ளது.
எனவே 2027ஆம் ஆண்டு சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
