யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவருக்கு பேராசிரியராக பதவி உயர்வு(Photo)
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி.ரகுராம் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழக பேரவை இன்று(25) வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஊடகத்துறை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சி.ரகுராமின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்துள்ளனர்.
மேலும் மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் கலைப்பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி.ரகுராம் ஊடகக் கற்கைகளில் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்று துறைகளுக்கு துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக (Cadre Chair professor) மூன்று பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறை, குழந்தை மருத்துவத் துறை, மற்றும் சமுதாய, குடும்ப மருத்துவத் துறை ஆகிய துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாதிருந்த இருக்கைப் பேராசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
பகிரங்க விளம்பரத்துக்கமைவாக கிடைத்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில், மருத்துவத் துறையில் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான பேராசிரியர் தி.குமணனை மருத்துவத் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை வைத்தியத் துறையில் பேராசிரியரும், குழந்தை வைத்திய நிபுணருமான பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஷ் குழந்தை வைத்தியத் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியரும், சமுதாய வைத்திய நிபுணருமான பேராசிரியர் குமரேந்திரனை சமுதாய மருத்துவத் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தந்த துறைகளுக்கான இருக்கை பேராசிரியர்களாகவும் நியமிப்பதற்கு தெரிவுக் குழுவின் பரிந்துரையை பரிசீலனை செய்த பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.