டிஜிட்டல் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சு தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை அக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்: சட்டத்தரணி பகிரங்க குற்றச்சாட்டு (Video)

டிஜிட்டல் பொருளாதார திட்டம்
இந்நிலையில், இதற்கு இணையான அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam