மின்சார சபைக்கு கிடைத்துள்ள இலாபம்
இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று கணக்காய்வு அறிக்கையின்படி 61.2 பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபை இலாபமாக பெற்றுள்ளது.
ஏனைய முதலீடுகளையும் சேர்த்து 75.7 பில்லியன் ரூபாய்கள் சபை இலாபமாக பெற்றுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் முதல் 18வீத கட்டண அதிகரிப்பினால் 21 பில்லியன் ரூபாய்கள் இலாபமாக கிடைத்துள்ளன.
அதிகமான மழை
பெரும்பாலும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலேயே அதிக இலாபம் கிடைத்துள்ளது.
செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பெய்த பாரிய மழையினால் இவ்வாறான வருமானம் சாத்தியமாகியுள்ளதாக தொழிற்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் எண்ணெய் மற்றும் நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தியை வியத்தகு முறையில் மின்சாரசபையினால் குறைக்க முடிந்துள்ளது.
அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு பொதுவாகப் பெறப்படும். எனினும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சராசரிக்கும் அதிகமான மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 17 மணி நேரம் முன்

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
