மின்சார சபைக்கு கிடைத்துள்ள இலாபம்
இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று கணக்காய்வு அறிக்கையின்படி 61.2 பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபை இலாபமாக பெற்றுள்ளது.
ஏனைய முதலீடுகளையும் சேர்த்து 75.7 பில்லியன் ரூபாய்கள் சபை இலாபமாக பெற்றுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் முதல் 18வீத கட்டண அதிகரிப்பினால் 21 பில்லியன் ரூபாய்கள் இலாபமாக கிடைத்துள்ளன.
அதிகமான மழை
பெரும்பாலும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலேயே அதிக இலாபம் கிடைத்துள்ளது.
செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பெய்த பாரிய மழையினால் இவ்வாறான வருமானம் சாத்தியமாகியுள்ளதாக தொழிற்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் எண்ணெய் மற்றும் நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தியை வியத்தகு முறையில் மின்சாரசபையினால் குறைக்க முடிந்துள்ளது.
அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு பொதுவாகப் பெறப்படும். எனினும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சராசரிக்கும் அதிகமான மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
