கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுப்பு(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தின் கேட்போர் கூடத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது இன்று (11.05.2023) 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் துளம்பு பெருகும் இடங்களை பிரதேச செயலாளர் பிரிவுகள் எனும் அடிப்படையில் துப்பரவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள்
இதன்போது கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன், மாவட்ட பொது வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் கரைச்சி கண்டாவளை பச்சிலைப் பள்ளி பூனகரி ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு வைத்திய பொலிஸாரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
அத்துடன் இராணுவத்தினர் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர்கள், கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளின் செயலாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் 15ம் திகதி கரைச்சி பிரிவில் உள்ள அனைத்து அமைப்புக்கள், திணைக்களங்கள், தொழிற்சாலைகள் அனைத்தையும் ஒன்றாக்கி சிரமதானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
மேலதிக செய்தி - யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPகுழுவில் இணையுங்கள். JOIN NOW |


