பிரதமர் பதவி விலகினால் தான் முழு அமைச்சரவையும் விலகியதாக அமையும் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களைக் கையளித்துள்ளனர்.
சமகால பிரதமர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் அதே பதவியில் நீடிக்க, ஏனைய அமைச்சர்கள் மட்டும் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர். எனினும் பிரதமர் பதவி விலகினால் தான் முழு அமைச்சரவையும் விலகியதாக அமையும் என இலங்கை அரசியல் சாசனம் வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மட்டும் தமது பதவியை விலகிக் கொள்வது அரசியலமைப்பின் 49இன் பிரகாரம் இது சாத்தியம் இல்லையென சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,




