இலங்கையில் மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல்!
இலங்கையில் நீர் வழங்களுக்கு தடை ஏற்பட கூடும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாக சபை தெரிவித்துள்ளது. எனினும் தடையின்றி நீரை வழங்க தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் 1939 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தெரியப்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.