கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலூக்க உரை
இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவனம் இணைந்து நடாத்திய யாதும் ஆனவள் செயலூக்க உரை நிகழ்வுவொன்று இடம்பெற்றது.
குறித்த நிக்ழ்வு நேற்று (23.02.2024) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கை நிறுவன இராசதுரை அரங்கில் நிறுவனத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி தலைமையில் நடைபெற்றது.
பிரதம பேச்சாளர்
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், மத தலைவர்கள், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்தியாவின் தலைசிறந்த செயலூக்க விரிவுரையாளர்களில் ஒருவரான ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலூக்க உரையினை நிகழ்த்தினார.
நிகழ்வில் கற்றலுக்குரிய உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, சிறப்பு உரையாற்றிய ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




