மகிந்தவுக்கு ஆதரவான அணித்திரள்வு கோட்டாவுக்கு எதிரானது
கொழும்பு கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு எதிரில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர் மீது மகிந்த ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
Bussed in @PresRajapaksa supporters, use their tested weapon, violence against journalists covering them.
— sunanda deshapriya (@sunandadesh) May 9, 2022
this pro-MARA mobilisation is mainly against his brother prez @GotabayaR. Struggle within Mafia families can be deadly. pic.twitter.com/EkmVapimHH
அத்துடன் ஒளிப்பதிவு கருவியையும் தாக்கியதாக ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தாக்குதல் நடத்திய நபரை ஊடகவியலாளர் பிடித்து எச்சரித்ததுடன் ஊடகங்கள் மீது கை வைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மகிந்தவின் ஆதரவாளர் ஒருவர் மன்னிப்பு கோரியுள்ளார். ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தி தவறிழைத்து கெள்ள வேண்டாம் எனவும் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள சுவிஸர்லாந்தில் தற்போது வசித்து வரும் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தா்ம் சோதனை செய்த ஆயுதம் மற்றும் வன்முறையை செய்தியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்.
மகிந்த சார்பான இந்த ஆர்ப்பாட்ட அணித்திரள்வு அவரது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இருப்பதாகவும் மாஃபிய குடும்பங்களுக்குள் நடக்கும் போராட்டம் கொடியது எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை அலரி மாளிகைக்குள் உள்ள மண்டபத்தில் பெருந்திரளான பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் கூடியுள்ளதுடன் பிரதமர் பதவி விலகக் கூடாது என அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.