சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தனியார்மயம் : இந்திய நிறுவனங்களுக்கு ஆர்வமில்லை
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் அரச விமான சேவையும் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் நட்டால்(Richard Nuttall) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்கு அமைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே சிறிலங்கன் ஏர்லைன்ஸூம் அதில் அடங்குவதாக நட்டால் இந்திய செய்திச்சேவை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தை
இந்த செயற்பாடு, ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என்றும் நட்டால் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி விமான நிறுவனமும் முதலீட்டாளரைத் தேடி வருவதாகவும், மூன்று விண்ணப்பதாரிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நட்டால் கூறியுள்ளார்.
எந்தவொரு இந்திய நிறுவனமும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் ஆனால் விண்ணப்பத்தை அனுப்பியுள்ள ஒரு கூட்டமைப்பில் சில இந்தியர்கள் இருப்பதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
