அரச ஊழியர்களுக்கு நிகரான சலுகை! தனியார் துறையினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி
தனிநபர்களால் ஏற்படுத்தப்பட்ட சுகாதார காப்புறுதி முறைமைகள் இருந்தாலும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொது காப்புறுதி முறை இதுவரை இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தனியார் துறை ஊழியர்களுக்கும் காப்புறுதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக, 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர்களின் அறக்கட்டளை நிதிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலங்களை தயாரிக்க ஒரு சட்ட வரைவைக் கேட்டுள்ளது.
ஆலோசனை வழங்குவதற்காக நேற்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில், தனியார் துறை ஊழியர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதிக்கு இணையான காப்புறுதியை வழங்குவதற்கான யோசனையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தமையை நினைவுகூர்ந்ததுடன், இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
