அரச ஊழியர்களுக்கு நிகரான சலுகை! தனியார் துறையினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி
தனிநபர்களால் ஏற்படுத்தப்பட்ட சுகாதார காப்புறுதி முறைமைகள் இருந்தாலும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொது காப்புறுதி முறை இதுவரை இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தனியார் துறை ஊழியர்களுக்கும் காப்புறுதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக, 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர்களின் அறக்கட்டளை நிதிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலங்களை தயாரிக்க ஒரு சட்ட வரைவைக் கேட்டுள்ளது.
ஆலோசனை வழங்குவதற்காக நேற்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில், தனியார் துறை ஊழியர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதிக்கு இணையான காப்புறுதியை வழங்குவதற்கான யோசனையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தமையை நினைவுகூர்ந்ததுடன், இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan