இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி : ஜனாதிபதி ஆலோசனை
பசுமை விவசாயம் என்பது தொடர்ந்தும் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும் எனவும் காய்கறி, தானியங்கள், சோளம் போன்ற பயிர்களுக்கு தேவையான இரசாயன பசளைகளை தேவைக்கு ஏற்ற வகையில் இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
பசளை மற்றும் விவசாய இரசாயன பசளை சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான இந்த பேச்சுவார்த்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எவ்வாறாயினும் பசுமை விவசாயம் அரசாங்கத்தின் கொள்கை எனவும் இரசாயன பசளைகள் எந்த வகையிலும் அரசாங்கத்தின் மானிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam