வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோட்டம்
வவுனியா வைத்தியசாலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
மன்னாரில்(Mannar) 9 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரே இவ்வாறு வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
மன்னார் - தலைமன்னார் பகுதியில் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய 55 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக சந்தேகநபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை (03.04.2024) வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
