வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோட்டம்
வவுனியா வைத்தியசாலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
மன்னாரில்(Mannar) 9 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரே இவ்வாறு வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
மன்னார் - தலைமன்னார் பகுதியில் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய 55 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக சந்தேகநபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை (03.04.2024) வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri